புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 19 கடவுள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் - பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 46/50.
Manage episode 313450280 series 3271179
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 19 கடவுள் கனிவுடன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் இரக்கத் திருஅவை என்ற மடலில் இவ்வாறு கூறுகிறார். “கடவுளுடன் எப்படித் தங்கி இருக்கிறீர்கள்? நீங்கள் ஆண்டவரைப் பார்க்கும் போது, நற்கருணைப் பெட்டியைப் பார்க்கும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பேசாமல்… அமைதியாக… என்ன செய்கிறீர்கள்? “நான் பேசுகிறேன், நான் சொல்கிறேன், நான் சிந்திக்கிறேன், நான் தியானிக்கிறேன், நான் கவனிக்கிறேன்,’ இவையெல்லாம், மிக நன்று, ஆனால் நீங்கள் கடவுள் உங்களைப் பார்க்க, கனிவுடன் கண்ணோக்க விடுகிறீர்களா? நாம் நம்மைக் கடவுளால் பார்க்கப்பட விடுவோம். அவர் நம்மைப் பார்க்கிறார். இதுவே ஒரு வகை இறைவேண்டல். நீங்கள் கடவுள் உங்களைக் காண விடுகிறீர்களா? ஆனால், இதை எவ்வாறு செய்கிறீர்கள்? நீங்கள் நற்கருணைப் பெட்டியைப் பார்க்கிறீர்கள், உங்களைப் பார்க்கப்பட விடுகிறீர்கள்… மிக எளிதானது. “இது மிக சலிப்பானது. நான் தூங்கி விடுகிறேன்.” அப்படி என்றால் தூங்குங்கள். அப்போதும் அவர் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்றை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள், அவர் உங்களைக் கனிவுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.”
வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப் படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.” யோசு 1:9
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? நீங்கள் கடவுளின் திருமுன் எவ்வாறு தங்கி இருக்கிறீர்கள்?
-------- -------------- -------------------
உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 46/50.
பணி. தனராசு சேச.
தூய ஆவியாரை நம் ஆண்டவர் பல பெயர்களைக் கொண்டு விளக்குகிறார். அவர் உன்னத்திலிருந்து வரும் வல்லமை, இயேசுவுக்கு உரியவற்றை யெல்லாம் அறிவிப்பவர், நினைவூட்டுபவர், நம்முள் இருந்தபடி கடவுளுக்கு உகந்த வண்ணம் செபிப்பவர், நம்முள் இருந்தபடி பகைவர்களை எதிர்த்துப் பேசுபவர், ஆறுதல் அளிப்பவர், துணையாளர் என்றெல்லாம் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.
தூய ஆவியாரை நம் ஆண்டவர் தண்ணீருக்கும் காற்றுக்கும் நெருப்புக்கும்
ஒப்பிடுகிறார். இவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம் பூதங்களைச்
சேர்ந்தவை. ஐம் பூதங்கள் நமது அன்றாட வாழ்வுக்கு இன்றியமையாதவை. இவற்றில் ஒன்று இல்லை என்றாலும் நாம் வாழ இயலாது. அவ்வாறே தூய ஆவியாரும் நமது அருள் வாழ்விற்கு, நமது வாழ்வின் முழு நோக்கத்தை, முதன்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இன்றி அமையாதவர்.
இறைவனை அறிவதற்கும், இறைவனின் திருவுளத்தை அறிவதற்குதம், செபிப்பதற்கும், திரு நூலைப் புரிந்து கொள்வதற்கும், எதிரிகளை எதிர் கொள்வதற்கும். வல்ல செயல்களை ஆற்றுவதற்கும், வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் துணையாளராகத் தூய ஆவியார் விளங்குகிறார். ஆகவே அவரை நம் ஆண்டவர் துணையாளர் என்று குறிப்பிடுகிறார். நாமும் அவரைத் துணையாளராகக் கொள்வோம்.
--------- --------------- -------------
இன்றைய 19.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-
புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -
Four platforms:
https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==
https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll
190集单集